மன்னார்குடி, ஜன.19- மன்னார்குடி பவர் ஜேசீஸ் சங்கத்தின் சார்பாக மன்னார்குடி வ.உ.சி.சாலையில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ராஜ சேகரன் தலைமை வகித்தார். முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பா ளர் சா.சம்பத் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உழவர் சந்தை மற்றும் வ.உ.சி ரோட்டில் நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன் னாள் மண்டல இயக்குநர் க.கண் ணன், செயலாளர் சோ.மோகன் ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.