திருச்சிராப்பள்ளி, ஆக.21-
குழந்தைகளைப் பயன்படுத்தி யாசகம் கேட்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
திருச்சி மாவட்டத்தில் கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில்வே ஜங்சன், பொது இடங்களில் மற்றும் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் கையில் குழந் தையுடன் சில பெண்கள் பிச்சை கேட்பது வாடிக்கையாக உள்ளது. இவர்கள் ரூ.500-க்கு குழந்தைகளை வாட கைக்கு எடுத்து, அந்த குழந்தைகளுக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைக்கின்ற னர். பின்னர் பிச்சை கேட்க குழந்தையை பயன்படுத்துகின்றனர். இதில் தரகர்கள் செயல்படுவது குறித்தும் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் செய்தி ஒளிபரப்பானது. இந்த சம்பவம் நமது மாவட்டத்தில் உலக பிரசித்திப் பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
குழந்தைகளை வைத்து பிச்சை கேட்பது மட்டும் இல்லாமல், அந்த பெண்கள் திருட்டி லும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் செல் போன், பர்ஸ் மற்றும் நகைகளை திருடுகின்ற னர். இதில் 14 வயது முதலான பெண் குழந்தை களும் அடக்கம். அந்தப் பெண்களின் எதிர் காலம் குறித்து எந்த கவலையும் இல்லை. இதுபோன்ற பெண்களை காவல்துறை உதவியுடன் அழைத்து, விசாரணை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவில் களுக்கு வரும் பெண்கள் மற்றும் பொது மக்களிடம் பிடிவாதமாக பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதை தடுக்க மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.