புதுக்கோட்டை, டிச.30- புதுக்கோட்டையில் பிறந்து தெலுங்கில் பிரபலமான எழுத்தாளராக விளங்கிய சாரதா நடராஜனின் நூற்றாண்டு விழா, புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, அதன் மாவட்டத் தலைவர் எழுத்தா ளர் அண்டனூர் சுரா தலைமை வகித்தார். ஜனமித்திரன் இதழ் குறித்து ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் சாரதா குறித்து லட்சுமி நாராயணன், த.அறம் ஆகியோர் பேசினர். புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ். இளங்கோ, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஸ்டாலின் சரவணன், அம்பிகா கல்வி றக்கட்டளை நிறுவனர் சந்திரா ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக மாநிலக் குழு உறுப்பினர் மு.சிவானந்தம் வர வேற்க, மாவட்டப் பொருளாளர் எழுத்தாளர் சோலச்சி அறி முகவுரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் பாலச்சந்தி ரன் தொகுத்து வழங்கினார். மாவட்டத் துணைச் செயலர் துவாரகா சுவாமிநாதன் நன்றி கூறினார்.