திருவாரூர், மே 12 - வண்டல் மண் எழுத்தாளர் சோலை சுந்தரப் பெருமாள் நினைவுச் சிறு கதைப் போட்டி பரிசளிப்பு விழா திரு வாரூரில் சனிக்கிழமை மாலை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவி யல் துறைத் தலைவர் முனைவர் இரா. காமராசு தலைமை வகித்து உரையாற்றி னார். திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சு.நடராஜன், சிறுகதை போட்டியில் நடுவராக செயல் பட்ட எழுத்தாளர் மு.சிவகுருநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.செளந்தரராஜன், மு.மா.செ.இரா. பகவான்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மேனாள் மாநிலத் தலை வர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், வண்டல் மண் எழுத்தாளர் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய படைப்பு களை நினைவுகூர்ந்தும், அவருடன் பய ணித்த நிகழ்வுகளை பகிர்ந்தும், சிறு கதைப் போட்டியில் வென்ற எழுத்தா ளர்களுக்கு பரிசுகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார். சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் வானவன் எழுதிய கூந்தாலிக்கூடு சிறுகதைக்கு முதல் பரிசாக ரொக்க தொகை ரூ.10,000. கோ.சுனில்ஜோகி எழுதிய ஓயி சிறுகதைக்கு 2 ஆம் பரி சாக ரூ.7,500, புலியூர் முருகேசன் எழுதிய புரூதர் எனும் டால்பின் சிறு கதைக்கு 3 ஆம் பரிசாக ரூ.5,000 மற்றும் நினைவு கேடயம் வழங்கப் பட்டது. முன்னதாக சு.கமலநாதன் வர வேற்றார். பேசும் புதிய சக்தி முதன்மை ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். எழுத்தாளர் சோலை சுந்தரப்பெருமாள் துணைவி யார் சு.பத்மாவதி நன்றி கூறினார். நிகழ்வில் எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் குடும்ப உறுப்பி னர்கள் மற்றும் சூழலிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.