districts

img

நவகண்டம் மற்றும் ஆநிரைகளுக்கான கற்சிலை வைத்து வழிபாடு

உடுமலை, மே 5- உடுமலை அருகே நவகண்டம் மற்றும் ஆநிரைகளுக்கான கற் சிலை வைத்து வழிபாடுவது தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் உடு மலையைச் சுற்றி பல்வேறு இடங்க ளில் இருக்கும் பழங்காலக் கற்சி லைகளைப் பார்த்து ஆவணப்ப டுத்தி வருகின்றனர். அந்த வகை யில் பண்ணைக்கிணறு அருகிலி ருக்கும் பீக்கல்பட்டி பகுதியில் அப் பம்மா, அவ்வதாத்தா எனும் மூத் தோர் முன்னோர்களைக் குறிக்கும் நடுகற்களை வைத்து வழிபட்டு வரு கின்றனர். இது நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்ட புடைப்புச் சிற்பம். சுமார் நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட இச் சிற்பத்தில் வீரன் ஒருவன் விலங்கு களைத் தாக்குவது போன்றும், இன் னொரு கையில் துப்பாக்கி ஏந்திய  நிலையிலும் அருகில் பெண் உரு வம் கொண்ட புடைப்புச்சிற்பமும் இருக்கின்றது. இதன் அடிப்பாகத் தில் முயல், நாய், மான் போன்ற  புடைப்புச் சிற்பங்களும் இருக்கின் றது. இதுகுறித்து தொல்லியல் ஆய் வாளர் மூர்த்தீஸ்வரி கூறுகையில், போருக்கு செல்லும்போதோ அல் லது மன்னர்களுக்காகவோ, தலை வனுக்காகவோ ஒருவன் தன்னு டைய சிரத்தை, தானே அறுத்து கொள்ளும் நவகண்டம் சிலையும் இங்கே இருக்கிறது. மார்கழி, தை  மாதங்களில் பண்ணைக்கிணறு, முக்கூடு ஜல்லிபட்டி, புதுப்பாளை யம் என அருகிலிருக்கும் ஆநிரை மேய்க்கும் மக்கள் இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய் கின்றனர். பொதுவாக மாலக்கோ வில் என்பது மெட்ராத்தி, கோட்ட மங்கலம், எலையமுத்தூர், புதுப் பாளையம், பண்ணைக்கிணறு, கரப்பாடி போன்ற பகுதிகளில், சமூக வாழ்வினை உறுதிப்படுத் தும் வகையில் பல்வேறு சமூக அடுக்குகளில் உயரமான கற்தூண் கள் காணப்படும். இதனைப்போ ரில் இறந்தவர்கள் நினைவாக வழி படும் மாலக்கோவில் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜோத்தம்பட்டி பகுதியில் 50க்கும்  மேற்பட்ட நடுகற்கள் வெட்ட வெளி யில் இதேபோன்று இருக்கின்றது. இதனை அந்த மக்கள் எல்லைக் கருப்பணசாமி, வேட்டைக்கருப்ப ணசாமி, எல்லைத் தெய்வங்கள் என வழிபடுகின்றனர். ஊரின் எல்லை யில் பெரும் போர் நிகழ்ந்து, அத னால் பெரும்பாலான மக்கள் இறந் துள்ளதை அறிந்து கொள்ள வேண் டும். அதேபோன்று இந்த பீக்கல் பட்டி பகுதியிலும் 20க்கும் மேற்பட்ட நடுகற்கள் நடப்பட்டு, இதனை தம்  முன்னோர் என்றும், போரில் இறந்த வர்கள் என்றும், மாலக்கோவில் என் றும் வழிபடுகின்றனர். மேலும், கால் நடைகளுக்காகத் தம் உயிரைத் துறந்தவர்கள் அல்லது உயிரை மீட்டவர்கள் என்றும் பொருள் கொள்ள முடிகிறது. எப்படியிருப்பி னும் பழங்கால நிகழ்வுகளையும், கால்நடை மேய்ச்சல் தொழிலை யும், உயர்வாகக் கொண்டு வாழ்ந்த னர் என்பதும், கால்நடைகளுக்கா கத் தம் உயிரையும் கொடுத்து மீட் டுள்ளனர் என்பதையும் இதன் வழி அறிந்து கொள்ள முடிகிறது, என் றார். இதனை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அருட் செல்வன், சிவகுமார் ஆகியோர் களப்பணி மேற்கொண்டு ஆவணப் படுத்தினர் என்பது குறிப்பிடத்தக் கது.