கரூர், செப்.25- தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் உலக மருந்தா ளுநர் தினம் கொண்டாடப் பட்டது. மருந்தாளுநர் சங்கத்தின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கரூர் மருத்துவக் கல் லூரி மருத்துவமனை கூட்ட ரங்கில் நடைபெற்றது. மாவட் டத் தலைவர் ஆர்.சுரேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலா ளர் ஆர்.பிரேம்குமார் வர வேற்றார். மாவட்டச் செய லாளர் எம்.சக்திவேல் வேலை அறிக்கையைச் சமர்ப்பித் தார். தமிழ்நாடு அரசு அனை த்து மருந்தாளுநர் சங்க மாநில முன்னாள் தலைவர் எம்.சுப்பிரமணியன், மாநி லச் செயலாளர் இளங்கோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாவட்டத் தலைவர் எம்.எஸ் அன்பழ கன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டத் தலை வர் ஆர்.சுரேஷ்குமார், மாவட்டத் துணைத் தலை வர் ஆர்.புகழேந்தி ஆகி யோர் பணி நிறைவு பெற்ற னர். அவர்கள் பாராட்டப் பெற்றனர். முஸ்தபா, அறிவுச் செல்வி, சிவசண்முகம், கணேசன், குமரேசன் உள் ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர். மாவட்டப் பொருளா ளர் ஞானபாரதி நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள்: மாவட்டத் தலைவராக ஆர்.பிரேம்குமார், மாவட்டத் துணைதலைவராக எஸ்.உமா ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். கரூரிலிருந்து சென் னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும், கரூர் நகரத்திற்கு உட்பட்ட காந்திகிராமம், தாந் தோணி, வெங்கமேடு, வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் தெருக்க ளில் சுற்றும் நாய்களை அப்பு றப்படுத்த வேண்டும், மருந்துகளை மருந் தாளுநர்களே கையாள வேண்டும். அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியமர்த்தப்பட்ட மருந்தா ளுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.