சென்னை, ஜூலை 31- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் உலக ஹெபடைடிஸ் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவ மனையின் டீன் பி.பாலாஜி கூறுகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் 800 ஹெபடைடிஸ் பி நோயாளிகளும், 300 ஹெபடைடிஸ் சி நோயாளி களும் தற்போது சிகிச்சை யில் உள்ளனர் என்றார். அரசு ஸ்டான்லி மருத்து வமனையில் மொத்தம் 60 ஆயிரத்து 544 பொது மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,713 பேருக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் 350 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப்பட்டது. 19,896 அதிக ஆபத்துள்ள நபர்க ளில் 81 பேர் ஹெபடைடிஸ் பி மற்றும் 22 பேர் ஹெபடை டிஸ் சி க்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டனர். 18,056 ரத்த தானம் செய்த வர்களில் 120 பேருக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் 20 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப் பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஹெபடைடிஸ் பி தொற்று உள்ள 10 நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். குணமடைந்த 3 நோயாளிகள் கவுரவிக்கப் பட்டனர். ஹெபடைடிஸ் பி தடுப் பூசி அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்படுகிறது என்றும் மருத்துவமனை டீன் தெரி வித்தார்.