தஞ்சாவூர், அக்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவு தின விழா நடத்தப்பட்டது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளா ளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பின்னர் அவர், மாணவர்களிடம் பேசுகையில், உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப் புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார். இதில், பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி, முதல்வர் சர்மிளா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.