districts

img

உலக இயற்கை பாதுகாப்பு தின பேரணி

தஞ்சாவூர்/அரியலூர், ஜூலை 29-

     தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா சிபிஎஸ்இ வித்யாலயா பள்ளி சார்பில், உலக இயற்கை பாதுகாப்பு தின பேரணி நடந்தது.

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை மாணவர்கள் பேரணியாக சென்றனர்.  

    மாணவர்கள் மரங்களைப் போல் வேடமிட்டு பேரணியாக சென்றதை பார்த்து பொதுமக்கள் ரசித்தனர். தொடந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர் பிச்சை, குமரப்பா பவுண்டேசன் பொருளாளர் அஸ்வின்ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர்

      அரியலூர் மாவட்டம் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில், இயற்கை வளம் பாதுகாப்பு தின விழா வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அக்கல்வி நிலையத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழிப்புணர்வுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.