அறந்தாங்கி, மார்ச் 12 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவில் அரசு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்த இடத்தில், உடனடி யாக மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்து தரக் கோரி, மாட்டு வண்டிகளுடன் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். போராட்டத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கூத்தபெரு மாள், வி.ச. ஒன்றியச் செயலாளர் கலந்தர், சிஐடியு துணைத் தலைவர் சிதம்பரம், விதொச ஒன்றியத் தலைவர் வீரையா, ஒன்றி யத் தலைவர் அழகர் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு ஆவு டையார்கோவில் வட்டம் பிராந்தணி பகுதி யில் மணல் குவாரி அமைத்து கொடுக்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். பொதுப் பணித்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி கள், துரிதமாக செயல்பட்டு தனிநபருக்கு குவாரி அமைத்து கொடுக்கின்றனர். ஆனால் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மட்டும் காலதாமதம் செய்வது ஏன்? தமிழக அரசு மாட்டுவண்டி தொழிலா ளர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனே குமாரி அமைத்து தர அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.