மயிலாடுதுறை, ஏப்.26-
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகேயுள்ள கிள்ளியூரில் வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளி மீது இடி -மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
திருக்கடையூர் அருகேயுள்ள கிள்ளியூர் ஆற்றங்கரை தெருவைத் சேர்ந்த சாமி நாதன் மகன் இளையராஜா (42). விவசாயக் கூலித் தொழி லாளியான இவர் கிள்ளியூர் ஆற்றங்கரை அருகே விளைநிலத்தில் விவசாயப் பணி செய்து கொண்டிருந்த போது பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கிய தில் இளையராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளையராஜாவுக்கு, அமுல் (35) என்ற மனைவியும், அஜய் (17) என்ற மகனும், கார்த்திகா (16) என்ற மகளும் உள்ளனர்.