மதுரை, நவ.28- மதுரை மாவட்டம் அய்யர்பங் களா அருகே உள்ள கண்ணனேந் தல் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் பூசாரி சசிகுமார். அந்த பகுதியில் உள்ள பள்ளி குழந்தை களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார். இதை கண்டித்தும், இந்த செய லில் ஈடுபட்ட பூசாரி சசிகுமாரை உட னடியாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கிட கோரியும், குற்றத்திற்கு உடந்தை யாக இருந்த பூசாரி மனைவி மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத் திட கோரியும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய காலத்தில் நீதி மற்றும் நிவாரணம் வழங்கிட கோரியும், பாதிக்கப்பட்ட குடும் பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங் கிட கோரியும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மதுரை புறநகர் - மாநகர் மாவட்டக் குழுக்கள் சார் பில் உச்சபரம்புமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.சரஸ்வதி தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.சசிகலா துவக்கி வைத்து பேசினார். மாநகர் மாவட்டச் செயலாளர் வை.ஜென்னியம்மாள், மாவட்டத் தலைவர் ஆர்.லதா, புறநகர் மாவட் டத் தலைவர் என்.விஜயா ஆகி யோர் கண்டனம் தெரிவித்துப் பேசி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிழக்கு மண்டலச் செயலா ளர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆர்ப் பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத் தாய் நிறைவு செய்து பேசினார். சங்கத்தின் மாநகர் மாவட்டப் பொருளாளர் சாந்தி, புறநகர் மாவட்டக் குழு உறுப்பினர் இந்திரா ஆகியோர் உட்பட பலர் இந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.