districts

கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு பாஜக அரசின் அராஜகத்தை கண்டித்து போராட்டம்

பாபநாசம், ஜூலை 21-

     மணிப்பூரில் பழங்குடியினப் பெண்களை  சாலைகளில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசின் அராஜகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

     குஜராத் மாநிலத்தில் 2002 இல் நடை பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பின் மறு வடிவமாக, தற்போது பாஜக  ஆளும் மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடி குக்கி இனமக்களுக்கு  எதிரான இன அழிப்பு அரங்கேறி வருகிறது. இதன் உச்ச மாக கடந்த மே மாதம் நிகழ்ந்த, குக்கி  இனப் பெண்களுக்கு எதிரான பாலியல்  வன்கொடுமை இந்தியர்களின் நெஞ்சங் களை உலுக்கியுள்ளது.

    மணிப்பூரில் மெய்டெய் வன்முறை கும்பல், குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவ பெண்களைச் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காணொலி வெளியாகி நம் நாட்டிற்கு  பெரும் தலைக்குனிவையும் அவமானத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த முயன்ற இப்பெண்களின் சகோதரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து  சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள காங் போக்பி மாவட்டத்தில் உள்ள பிபைனோம் கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் கடந்த  மே மாதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிகிறது.  நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா?  என கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.  

    இந்த அராஜக சம்பவத்தின் பின்னணி யில் மணிப்பூர் மாநில காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதாக கூறுகிறது. பல மாதங்களாகத் தொடர்ந்து கலவரம், தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வந்தாலும் மாநில பாஜக அரசும், ஒன்றிய பாஜக அரசும் மௌனமாக வேடிக்கை  பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலை யளிக்கிறது.

    மக்கள் மனங்களில் பகைமையையும், வெறுப்பையும் உண்டாக்கி அதன் வாயிலாக  அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவின் இந்தச்  செயலை கண்டிக்க வார்த்தையில்லை. இந்த  அராஜகத்தை கண்டித்து மனிதநேய மக்கள்  கட்சி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.