districts

img

மகளிர் உரிமைத் தொகை மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்

புதுக்கோட்டை, செப்.27 - கலைஞரின் மகளிர் உரிமைத்  தொகை எங்கள் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என  பயனாளிகள் கருத்துத் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர் க.பிரேமலதா வெளி யிட்டுள்ள செய்திக் கட்டுரையில் கூறியிருப் பதாவது: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் “கலைஞர் மகளிர் உரி மைத் திட்டம்” குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், மகளி ருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் புதுக் கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பய னாளிகள் சிரமமின்றி பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு வங்கிப்  பற்று அட்டைகள் (ஏடிஎம் கார்டு) வழங்கப் பட்டு வருகின்றன. அதனொரு பகுதியாக திருமயம் வட்டத் தில் 3,391 மகளிருக்கும், ஆலங்குடி வட்டத் தில் 4,431 மகளிருக்கும் என மொத்தம் 7,822  மகளிருக்கு செப்.15 அன்று வங்கிப் பற்று அட்டைகள் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரால் வழங்கப் பட்டது என்றார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 பெற்றுக்கொண்ட வம்பன் நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்த பயனாளி தன லட்சுமி கூறுகையில், “எனது கணவர் வம்பன்  நால்ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரு கிறார். குறைந்த வருமானமே கிடைத்து வரு கிறது. எனது வங்கிக் கணக்கில் மாதந்தோ றும் ரூ.1000 வழங்குவதோடு ஏடிஎம் கார்டும்  வழங்கப்படுவதால் குடும்பத்தின் சிறு, சிறு  தேவைகளை அவ்வப்பொழுது பூர்த்தி செய்வதற்கு வசதியாக இருக்கும்” என்றார். மாஞ்சான்விடுதியைச் சேர்ந்த பயனாளி  மாசிலா கூறுகையில், “எனது கணவர் சலூன்  கடை நடத்தி வருகிறார். எங்களது மகன் 12  ஆம் வகுப்பு படித்து வருகிறான். எனது கண வருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவ ரால் சரியாக வேலை செய்ய முடியவில்லை.  இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைத்திருப்பது எங்கள் குடும்பத் திற்கு பேருதவியாக இருக்கும். முதல மைச்சருக்கு மிகுந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்” என்றார்.