districts

பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கூட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 24-

    ஆதிதிராவிடர் மற்றும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்களுக் கான இரண்டாவது காலாண்டு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

   பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில், கிராமங்களில் நடைபெறும் கிராமசபை கூட்டங்கள் வாயி லாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் எடுத்துரைக்க வேண்டும். மேலும்,  பொதுமக்களுக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட மருத்துவத் தேவைகளை அரசு மருத்துவமனைகள் வாயிலாக பூர்த்தி செய்து கொள்ளலாம் என  பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.