கும்பகோணம் ,ஜூலை 31- கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை பாலத் தில் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண டிக்கெட்டுகள் கிடந்தன. அவற்றை வீசி சென்றது யார் என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பய ணம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம் திரு நாகேஸ்வரம், திருப்பனந் தாள், சோழபுரம், சுவாமி மலை, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மகளிர் கட்டண மில்லா சாதா ரண பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் கும்ப கோணம் அருகே அணைக் கரை பாலத்தில் மகளிர் கட்டண மில்லா பயணத்திற் கான இலவச டிக்கெட் பண்டல் கிடந்தன. இதனைஅந்த வழி யாக சென்ற நபர் அரசு போக்கு வரத்துக்கழக கும்பகோ ணம் கோட்ட தலைமை அலு வலகத்தில் ஒப்படைத்தார். சராசரியாக ஒரு டிக்கெட் பண்டலில் 100 பேர் பயணம் செய்யக்கூடிய டிக்கெட் இருக் கும். பாலத்தில் கிடந்த டிக்கெட் பண்டலில் இருந்து பெண்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது போக மீதி டிக்கெட்டுகள் என தெரிய வரு கிறது இது சம்பந்தமாக அதிகாரி கள் விசாரணை செய்து வருகின்றனர்.