districts

மின்னல் தாக்கி பெண் பலி

திருவில்லிபுத்தூர், ஏப்.25-

   விருதுநகர் மாவட்டம,திருவில்லிபுத்தூர் அருகே சண்முகசுந்தராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் மனைவி பொன்னுத்தாய்.

   இவர் செவ்வாயன்று  பட்டாசு தொழிற்சாலையில்  பணி  முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது மின்னல் தாக்கி படு காயம் அடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலமாக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி  அவர் பலியானார். இவருடன் வந்த மூன்று பேர்  காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.