கடமலைக்குண்டு, செப்.2- தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் அனைத் தும் வருசநாடு மூலவைகை ஆற்றில் கலந்து வரு கிறது. மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை கழிவு நீருடன் சேர்த்து பிளாஸ்டிக் குப்பைகளும் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் குவிந்து காணப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ஆற்றின் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் அங்கு மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் பெரும்பாலானோர் ஆற்றில் அமர்ந்து மது குடித்து வரு கின்றனர். அதில் சிலர் மது பாட்டில்களை ஆற்றில் உடைத்து வீசுகின்றனர். இதனால் ஆற்றில் நீர்வரத்து ஏற்படும்போது உடைந்தமது பாட்டில்கள் ஆறு முழு வதும் பரவி விடுகிறது. இதன் அருகே உறை கிணறுகள் அமைந்துள்ளதால் குடிநீர் மாசடையும் நிலை காணப்பட்டது. எனவே ஆற்றில் மது அருந்துவதை தடுப்பதுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்ற வேண்டும், மேலும் சுத்தி கரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.