சின்னாளப்பட்டி, டிச.16- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பள்ள பட்டியில் புதிய நூலகம் கட்டப்பட்டு பணி முடிவடைந்து ஆறு மாத காலமாக திறக்கப்படாமல் உள்ளது. தற்சமயம் நூலகம் வேலாயுதபுரத்தில் அண்ணா மறு மலர்ச்சி நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் எந்த அடிப்படை வசதியுமின்றி வாசகர்களுக்கு பய னின்றி செயல்படுகிறது. மேலும் புதிய நூலகம் திறக் கப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோதி களின் கூடாரமாகவும் இருக்கிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் புதிய நூலக கட்டிடத்தை விரைவில் பயன் பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.