districts

img

நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.என். நேரு வழங்கல்

திருச்சிராப்பள்ளி, நவ,21-  திருச்சி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் வியாழன் அன்று நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ.18.44 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டி ரூ 46.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 1576 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.  இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் அன்பழகன், உதவி ஆட்சியர் அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்கா தாரிணி, திட்ட இயக்குநர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.