தஞ்சாவூர், பிப்.9- புதுதில்லியிலிருந்து தஞ்சைக்கு வந்த சித்தா ஆரோக்கிய பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரக் குழு வினருக்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தி னர் வரவேற்பு அளித்தனர். மத்திய ஆயுஷ் அமைச்சக நிதி நல்கையின்கீழ், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும், சித்தா ஆராய்ச்சிகளுக் கான மத்திய கவுன்சிலும் இணைந்து நடத்தும் சித்தா ஆரோக்கிய பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சார இரு சக்கர வாகனப் பேரணி, மருத்துவ முகாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுதில்லியில் துவக்கி வைக்கப்பட்டது. 17 சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றுள்ள இப்பேரணி, தனது பயணத்தை புதுதில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை 3,333 கிலோ மீட்டர் தூரம், 8 மாநிலங்களில் 21 நக ரங்களில் சித்த மருத்துவ விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளது. இதனொரு பகுதியாக இப்பேரணி, வியாழக்கிழமை தஞ்சைக்கு வந்தது. பேரணியை வரவேற்கும் விதமாக, தமிழ்ப் பல்கலைக்கழகம் சித்த மருத்து வத் துறை பேராசிரியர்கள் மருத்து வர்கள் பெ.பாரத ஜோதி, ஜெ.அன்பு ஜெபசுனில்சன், து.மாண்டெலா, பழ. பாலசுப்ரமணியன் சிறப்பு ஏற்பாடு களை செய்திருந்தனர். தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளு வன், சித்த மருத்துவப் பேரணியில் கலந்து கொண்ட சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பேரணி குழுவினரை வாழ்த்தி சிறப்பு செய்தார். தமிழ் பல்கலை. பதிவா ளர் பேரா. சி.தியாகராஜன், பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பேரா. ரெ.நீலகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் சித்த ஆராய்ச்சிகளுக்கான மத்திய கவுன்சிலுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பேரணி மற்றும் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கல்வி சாரா பணியா ளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட 550 பேருக்கு அமுக்கரா லேகியம், ஏலாதி சூரண மாத் திரை, தாளி சாதி வடகம், வலி நிவா ரண களிம்பு, மூலிகை குளியல் சோப் அடங்கிய சித்த மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை தமிழ் பல்கலைக் கழக மக்கள் செய்தி தொடர்பாளர் பேரா சிரியர் சு.முருகன் வழி நடத்தினார். சித்த மருத்துவத் துறை உதவி பேராசிரியர் முனைவர் பழ.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.