மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு - சுகந்தி இல்ல திருமண வரவேற்பு விழா கரூரில் நடைபெற்றது. விழாவில் மணமக்கள் ஜோ.வசந்தன், மோ.சஹானா ஆகியோரை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, கரூர் மாவட்ட மூத்த தலைவர் ஜி.ரத்னவேலு, திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி.சின்னசாமி, தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் பல்வேறு அமைப்பினர் வாழ்த்தினர்.