districts

img

டெல்டா மாவட்டங்களில் தொழிற்பேட்டைகளைக் கொண்டு வருவோம்

தஞ்சாவூர், ஜூன் 18-  டெல்டா மாவட்டங்களில் விவசா யம் சார்ந்த தொழிற்பேட்டைகளைக் கொண்டு வருவோம் என்றார் தொழில்  துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

இந்தக் கூட்டணி தொடர்ந்து எட்டாவது வெற்றியைப் பெற்றுள் ளது. அடுத்து விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் ஒன்பதாவது வெற்றியை யும், பின்னர் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பத்தாவது வெற்றியையும் இக்கூட்டணி பெறும். தமிழக முதல்வர் தஞ்சாவூ ருக்கு சிப்காட் திட்டத்தைக் கொண்டு  வந்துள்ளார்.

இதேபோல, விவசா யம் சாந்த தொழிற்பேட்டைகளையும் இப்பகுதிக்குக் கொண்டு வருவோம்.  திருவாரூரிலும் தொழிற்பேட்டைக் கான இடம் தேர்வு நடைபெறுகிறது. எனவே, விரைவில் திருவாரூருக்கு நல்ல செய்தி இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் விவ சாயப் பூமியைக் காப்போம். அதே  நேரத்தில் விவசாயிகளின் பிள்ளை களுக்கு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரு வதற்கான பணிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், “இக்கட்சிக்கு ஸ்டாலின் தலைவ ராக பொறுப்பேற்ற பிறகு எட்டாவது  தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். அவர் கொண்டு வந்த திட்டம்  இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தி யுள்ளது. திமுக இளைஞரணி செய லர் 23 நாள்களில் 8,500 கி.மீ. பய ணித்து பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளோம்.  அடுத்து 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்த லிலும் 200-க்கும் அதிகமான தொகுதி களில் வெற்றி பெறுவதற்கான பணி யைத் தொடங்குவதற்கான கூட்ட மாகவும் இக்கூட்டம் இருக்கும்” என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மக்க ளவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா.அண்ணாதுரை, நா.அசோக்குமார், காங்கிரஸ் மாவட் டத் தலைவர்கள் பி.ஜி.ராஜேந்தி ரன், டி.ஆர்.லோகநாதன், எஸ்.எம்.பி.துரைவேலன், திராவிடர் கழகப் பொதுச் செயலர் இரா. ஜெயக்குமார், மதிமுக தெற்கு மாவட்டச் செயலர் வி. தமிழ்ச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர்  முத்து.உத்திராபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டச் செயலாளர் கோ.ஜெய சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.