கொள்ளிடம், செப்.6- குழாய் உடைப்பால் குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் சென்று கொண்டி ருக்கிறது. இதன் மூலம் கொள்ளிடம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்கிறது. இது கிராமங்களுக்கு குடிநீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயாக இருந்து வருகிறது. சாமியம் கிராமத்தில் புதைக்கப்பட் டுள்ள இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வெளி யேறி, அருகில் உள்ள சாக்கடையில் கலக் கிறது. இதனால் கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இந்த கொள்ளிடம் கூட்டுக் குடிநீரை நம்பியே கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் பழையதாக இருப்பதால், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. எனவே குடிநீர் வீணாவதை தவிர்க்கும் வகை யில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள பழைய குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்களை பதிக்கவும், குடிநீர் வீணாவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.