districts

img

மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து தென்காசியில் நடைபயணம்

தென்காசி, பிப்.4-  ஒன்றிய மோடி அரசு  விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலா ளர்கள், மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதைக் கண்டித்தும் ஏப். 5-ஆம்தேதி தில்லி நாடாளுமன்றம் நோக்கி நடைபெறவுள்ள பேரணியை விளக்கியும் தென்காசி மாவட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு நடை பயணம் நடைபெற்றது.  சனிக்கிழமை ஆலங்குளம், வீரகேர ளம்புதூர் தாலுகாவிற்குட்பட்ட மருதம் புத்தூர், நாலாங்குறிச்சி, உடையாம்புளி ஓடைமறிச்சான் காந்திபுரம், காசிநாதபுரம் புதுப்பட்டி பகுதிகளில் நடைபயணம் நடைபெற்றது. பீடி சங்க மாவட்டப் பொ துச்செயலாளர் மகாவிஷ்ணு தலைமை யில் நடைபெற்ற பயணத்தில் குணசீலன், நல்லையா, சங்கரன், வெற்றிவேல்  முருகே சன், வள்ளிமயில், பால்ராஜ், பரமசிவன் வள்ளியம்மாள், சங்கர், லிங்கராஜ் முத்துக் கனி, நயினார், மாடசாமி, பெருமாள், பாலு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.