மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி ஓஹெச்டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழு ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் காத்திருப்பு போராட்டம் செவ்வாயன்று சங்கத்தின் மாவட்ட தலைவர் ப.மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். ஓஹெச்டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.