districts

img

கொட்டும் மழையிலும் காத்திருப்பு போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.24-

    திருச்சி மாநகராட்சி 65ஆவது வார்டில் கிழக்கு, மேற்கு தாலுகாவிற்குட்பட்ட பஞ்சப்  பூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடி யிருந்து வரும் மக்களுக்கு நத்தமாக வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி கிளைகள் சார்பில்  கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஏப்.25) காத்திருக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.

   இந்த காத்திருப்புப் போராட்ட விளக்கப்  பொதுக்கூட்டம் கீழப்பஞ்சப்பூர் நால்ரோடு பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்  டத்திற்கு சிபிஎம் அபிஷேகபுரம் பகுதிச் செய லாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கிளை செயலாளர் குருநாதன் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாந கரச் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் சரஸ்வதி, இளங்கோவன், கல்யாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

   கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி பேசுகையில்: ‘‘பஞ்சப்  பூர் கிராமத்தில் நாடு விடுதலை பெறுவதற்கு  முன்பும், விடுதலை பெற்ற பின்பும் 5 தலை முறையாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 4 கிலோ மீட்டம் தொலைவில்  வாரி உள்ளது. ஆனால், இப்பகுதி வாரி புறம்போக்கு என்றும் இங்குள்ளவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனவும் அரசு கூறிவரு கிறது.  

  இதனால் இந்த இடத்தை எப்பொழுது வேண்டுமானாலும் அரசு எடுக்கும் அபா யம் உள்ளது. இப்பகுதி மக்கள் சாலை, பள்ளி, பேருந்து என அனைத்து அடிப்படை வசதிகளையும் போராடித் தான் பெற் றுள்ளனர். எனவே நாம் ஒன்றுபட்டு போராடி னால் தான் நமது இடத்தை பாதுகாத்து வகை மாற்றம் செய்து பட்டா பெற முடியும்’’ என்றார்.