districts

img

பெண் நில அளவையரை தாக்கியவர் மீது நடவடிக்கை கோரி காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச் 4 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பெரியக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்  பவ்யா (24). இவர் நில அளவையராக பணி யாற்றி வருகிறார். கடந்த மார்ச் 2 அன்ற சோழ கன்குடிக்காட்டை சேர்ந்த முருகானந்தத்தின் தங்கை ஜோதி என்பவர் இடத்தை அளவீடு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது முருகானந்தம், அவரது மனைவி செல்வகுமாரி, தங்கை ஜோதி, அவரது  கணவர் சுபாஷ் ஆகியோர், அளவீடு செய்யும் பணியை வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, நில அளவையராக பவ்யா எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என முருகானந்தத்திடம் கேட்டுள் ளார். இதற்கு முருகானந்தம் தகாத வார்த்தை யில் பேசி, கொலை செய்து விடுவேன் என மிரட்டி,  பவ்யாவின் தலையில் தாக்கியுள்ளார். இதை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மாரி யம்மாளையும் தாக்கியுள்ளார்.  இதுகுறித்து பவ்யா மதுக்கூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர் களை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நில அளவையர் பவ்யா மீது  தாக்குதல் நடத்திய முருகானந்தம் மீது குண்டர்  சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். சமரச பேச்சுவார்த்தை செய்த காவல்  ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் பாரதிராஜா, மாவட்டத்  தலைவர் தானியல் மார்ஸ் ஆகியோர் தலைமை  வகித்தனர். இதில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான நில அளவையர்கள், வரு வாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  இதனால் திங்கள்கிழமை நில அளவைப் பணி கள் பாதிக்கப்பட்டன.