districts

img

நூறு நாள் வேலை கோரி ஆலத்தூரில் வி.தொ.ச போராட்டம்

பெரம்பலூர், ஆக.11 -

    இலவச வீட்டு மனை பட்டா மற்றும்  நூறு நாள் வேலை வழங்கக் கோரி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு வியாழனன்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  

   விதொச ஆலத்தூர் கிளைச் செயலா ளர் வெள்ளையம்மாள் தலைமை வகித் தார். விதொச மாநில துணைத்தலைவர் ஜி.ஸ்டாலின், சிபிஎம் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ், விதொச மாவட்டச்  செயலாளர் அ.கலையரசி, விவசாய  சங்க மாவட்டத் தலைவர் என்.செல்ல துரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

   பாடாலூர் பகுதியில் வசிக்கும் வீடு  இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். ஆலத் தூர் பகுதியில் நூறு நாள் வேலையை  முழுமையாக வழங்கி சம்பள பாக்கியை உடனே தர வேண்டும். பாடா லூர் சுற்றுப்புறப் பகுதி மக்களுக்கு சுத்த மான குடிநீர் கிடைக்க வசதி செய்து தரவேண்டும்.

   பாடாலூரில் மயானப் பாதையை சீரமைத்து அங்கு தண்ணீர்  வசதி செய்துதர வேண்டும்.  பட்டியல் வகுப்பு மக்களுக்கு கட்டப் பட்ட பொது கழிப்பறை கட்டி முடிக்கப் பட்ட நிலையில், அது மக்கள் பயன் பாட்டிற்கு வரவில்லை. எனவே ஊராட்சி  நிர்வாகம் இதனை உடனடியாக திறக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள அனைத்து கால் வாய்களிலும் சாக்கடைகளை தூர்வாரி  சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறை வேற்றித் தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர் சங்க பிரதி நிதிகளுடன்,  ஆலத்தூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் இரண்டு மாதத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவ தாக உறுதியளிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.