விருதுநகர், ஆக.11- மாற்றுத்திறனாளிகள் நல னுக்காக சிறப்பாக சேவை புரிந்த தற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படும். அதில் நிகழாண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி ஆகியோருக்கு வரும் ஆக.15 இல் சென்னை யில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பான சேவை புரிந்ததற்காக தமி ழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள் ளார். மேலும், சிறந்த மருத்துவருக்கான விருதை ஜெ.விஜய லட்சுமியும், சிறந்த நிறுவனத்திற்கான விருதை வித்யா சாகர், சிறந்த சமூக பணியாளர் விருதை எம்.சூசை ஆண்டனி, அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்திய மிண்டா கார்ப்பரேசன் லிட், மதுரை யைச் சேர்ந்த தேங்யூ புட்ஸ், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானம் பேக்கேஜிங் பி.லிட் ஆகியவை பெறு கின்றன.