districts

img

அரசு மருத்துவக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர், ஏப்.2 - அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அனிதா நினைவு கலையரங்கில், புதிய வாக்காளர்கள் வாக்க ளிப்பது குறித்து செவ்வாய்க்கிழமை விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். பின்பு, நாடகம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்து கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் ராம கிருஷ்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராம லிங்கம், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.