districts

img

சிபிஐ வேட்பாளர் செல்வராஜூக்கு வாக்குச் சேகரிப்பு

திருவாரூர், ஏப்.17- இந்தியா கூட்டணியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி சிபிஐ  வேட்பாளர்  வை.செல்வராஜை  ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத் திற்கு, திருவாரூர் மாவட்டம் குடவாசல்  கடைவீதியில் இறுதிக் கட்ட வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.  இந்த வாக்குச் சேகரிப்பு பேர ணிக்கு குடவாசல் திமுக ஒன்றியச் செயலாளர் பா.பிரபாகரன் தலைமை  வகித்தார். குடவாசல் நகரச் செயலா ளர்கள் சிபிஎம் டி.ஜி.சேகர், திமுக  ஏ.கே.டி.சேரன், காங்கிரஸ் செந்தில்,  விசிக பால் கிட்டு, மதிமுக மாரிமுத்து  மற்றும் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். இப்பேரணி, குடவாசல் கோகிலா பெட்ரோல் பங்க் அருகிலிருந்து பள்ளி வாசல், கடைவீதி, குடவாசல் பேருந்து  நிலையம் மற்றும் ஒகை ஆற்றுப்பா லம் வரை நடந்து, குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பாக நன்னிலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத் திற்கு நன்னிலம் ஒன்றியச் செயலா ளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.சேகர் பிரச்சாரத்தை துவக்கி  வைத்தார். நன்னிலம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் டி.வீரபாண்டி யன் முன்னிலையில் கொல்லு மாங்குடியில் துவங்கிய பிரச்சாரம் செருவளூர், பாவட்டக்குடி, சன்னா நல்லூர், வேலங்குடி, ஆண்டிபந்தல்,  திருக்கொட்டாரம், காக்காகொட்டூர், கொல்லாபுரம், மேனாங்கடி மற்றும் பேரளம், நன்னிலம் உள்ளிட்ட முக்கிய  இடங்களில் நடந்து, பூந்தோட்டத்தில் நிறைவு பெற்றது. பிரச்சாரப் பயணத்தில் சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உது மான், பேரளம் நகரச் செயலாளர் சீனி.ராஜேந்திரன், மாவட்ட, ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமுஎகச பிரச்சாரம் திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியத்தில் உள்ள கொல்லு மாங்குடி கடைவீதியில் நன்னிலம் நையாண்டி கலை குழுவினர், நை யாண்டி பாடல்களை பாடி வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ் கதிர் அரி வாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் செய்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நன்னிலம் கிளை சார்பாக வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் கவிஞர் வரத. வசந்தராஜன், துணைச் செயலாளர்  தியாகு ரஜினிகாந்த் ஆகியோர் தலை மையில், திமுக வடக்கு ஒன்றிய செய லாளர் எஸ்.எம்.செல்வராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். முத்துப்பேட்டையில் நடந்த பிரச்சாரத்திற்கு தமுஎகச கிளை தலை வர் பி.என்.கனகசுந்தரம் தலைமை  வகித்தார். பிரச்சார பயணத்தை மாவட் டத் துணைத் தலைவர் சி.செல்ல துரை, புரட்சிகர பாடல்களை பாடி துவக்கி வைத்தார். மாவட்டத் தலை வர் எம்.சௌந்தரராஜன் உள்ளிட்ட  பலர், வேட்பாளர் வை.செல்வராஜூக்கு வாக்குச் சேகரித்தார். பிரச்சாரப் பயணத்தில் அமைப் பின் கிளைச் செயலாளர் கோவி.ரங்க சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.