பாபநாசம், ஏப்.28-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகா னந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் பாப நாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் சேர்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன.
சேர்கள், புத்தகங்களை கல்விச் சங்க செயலர் கண்ணதாசன் பள்ளித் தலைமையா சிரியர் மணியரசனிடம் வழங்கினார். இதில் சங்கத் தலைவர் தேவராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர் சிவா உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, வடக்கு மாங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, ஆதி திராவிடர் நலப்பள்ளி, வெங்காய களஞ்சேரி, ஏரி, ஆவூர், கோயில் தேவராயன் பேட்டை, பசுபதி கோயில் உள்ளிட்ட பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.