திருச்சிராப்பள்ளி, ஜன.19- 1982ல் தொழிலாளர்களின் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஊர்வலம் சென்றதற்காக காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் சிஐடியு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் புதனன்று திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அனுசரிக்கப்பட்டது. பின்னர் ஒன்றிய அரசின், விவசாயிகள், தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் கே.சி.பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தங்கதுரை ஆகியோர் விளக்கி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.