மயிலாடுதுறை, மார்ச் 23 - சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மயி லாடுதுறையில் சிறப்பு கருத்தரங்கம் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.சரிதா, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.அய்யப்பன் ஆகியோர் தலைமை வகித் தார். மாதர் சங்க ஒன்றியத் தலைவர் ஜி.உஷா ராணி வரவேற்றார். இரு சங்கங்களின் மாவட்டப் பொருளாளர்கள் தேவேந்திரன், ஜி.கலைச்செல்வி, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலா ளர் ஜி.வெண்ணிலா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன், மாவட்டத் தலை வர் எம்.அய்யப்பன், மாநில செயற்குழு உறுப் பினர் என்.ஆனந்தி ஆகியோர் கருத்து ரையாற்றினர். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தை கள் மீது அதிகரித்து வரும் வன்கொடுமை களை தடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்களை குறைக்க கூடாது. சாதி ஆணவப் படுகொலை களை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். பெண்கள் பணிபுரியும் தனியார் மற்றும் அரசுத் துறைகளிலும் கல்லூரி, கல்வி நிலையங்களிலும் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இக்கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தையொட்டி கருத்தரங்கு நடைபெற்ற ஆர்.ஓ.ஏ அலுவலர்கள் சங்க கட்டிடம் முன்பு, பகத்சிங் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலா ளர் தயானி நன்றி கூறினார்.