தஞ்சாவூர், ஆக.18 - பேராவூரணி அருகே அரசுத் தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில், ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள கூப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 54 மாணவர் கள் படித்து வருகின்றனர். இந்நிலை யில் பள்ளி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பேரூராட்சி கவுன்சிலர் முகிலன், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற் றோர்கள், கிராமப் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர். பீரோ, பிரிண்டர், புரொஜெக்டர், ஏணி, ஸ்டாண்ட், ரேக், தலைவர் படங்கள், கேரம், செஸ் விளையாட்டு உபகரணங்கள், பாய், ஜமுக்காளம், குடம், நோட், பிஸ்கட், வாலி, டம்ளர், மாப் உட்பட பள்ளிக்குத் தேவை யான பொருட்களை, பேராவூரணி காளி கோவில் அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மேளதாளத்துடன் ஊர்வல மாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர். வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுல கிருஷ்ணன், பள்ளித் தலைமையா சிரியர் சரோஜா மற்றும் மாணவர்கள், கிராம மக்களை மலர் தூவி வர வேற்று சீர்வரிசை பொருட்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கிராம பொது மக்களுக்கு பள்ளி சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.