புதுக்கோட்டை, ஜூன் 27-
டாக்டர் கலைஞரின் நூற் றாண்டு விழாவினை முன் னிட்டு, பொன்னமராவதி ஒன் றியம் ஒலியமங்கலத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகு பதி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்தது:
ஒலியமங்கலத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் கால்நடை மருந்தகம் திறந்து வைக் கப்பட்டுள்ளது. கால்நடை களுக்கான தடுப்பூசிகள், சத் தான உணவுகளை முறை யாக வழங்க வேண்டும். இந்த முகாமில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை யளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதி ரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரி பார்ப்பு, கோழி தடுப்பூசிகள், வெறிநோய் தடுப்பூசிகள் தீவன வளர்ப்பு, சிறு அறுவை சிகிச்சைகள், வகைப்படுத் தப்பட்ட பெண் கன்று உற் பத்திக்கான விந்தணு பிரித்த றிதல், புல்வளர்ப்பு, தாது உப்பு கலவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற் றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழி களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
நிகழ்வில் மண்டல இணை இயக்குநர் எஸ்.எஸ். அரசு, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தை சாமி, பொது மேலாளர் (ஆவின்) எஸ்.தங்கமணி, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையப் பேராசிரியர் மற்றும் தலைவர் புவராஜன், உதவி இயக்குநர் ஆர்.பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.