districts

கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 8 -  திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மத்திய பண்ணையில் பால் உற்பத்தியினை பெருக்கிட, கிராமப் புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதியினை அளிப்பது அவசியமாகிறது. இதற் காக தமிழக அரசு பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேளாண்மை அபி விருத்தி திட்டத்தின் மூலம் புதிய  கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் கொண்டு செயல்படுத்திட, இந்த  ஒன்றியத்தில் காலியாக உள்ள  கால்நடை மருத்துவ ஆலோச கர்கள் பணிநிலைக்கு ஒப்பந்த அடிப் படையில் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை  மருத்துவ பட்டதாரிகள், இளநிலை கால்நடை மருத்துவ பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சிலின் பதிவு சான்றிதழ், இரண்டு சக்கரம்  அல்லது நான்கு சக்கரம் ஓட்டுநர்  உரிமம் (வயது வரம்பு 50-க்குள்  இருக்க வேண்டும்) ஆகியவற்று டன் ஜூன் 22 ஆம் தேதி காலை 11  மணிக்கு திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் நடைபெற உள்ள நேரடி நியமன தேர்விற்கு முழுமை யான தகுதிகள் பெற்ற கால்நடை மருத்துவர் கலந்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவ ராசு தெரிவித்துள்ளார்.