நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் வெண்மணி ஊராட்சி, காவலக்குடி கிராமத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கட்சியில் இணைந்தவர்களுக்கு கதர் ஆடை அணிவித்து, செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் வாழ்த்துரை ஆற்றினார். கீழ்வேளுர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.