புதுக்கோட்டை, ஜூன் 28 - அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டைக்கு புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெள்ளிக் கிழமை களப்பயணம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீ வெங்க டேஸ்வரா மெட்ரிக். மேல் நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாண வர்கள், பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் வெள்ளிக் கிழமை களப்பயணம் மேற் கொண்டனர். தமிழ்நாடு அரசால் அக ழாய்வுப் பணிகள் நடை பெற்று வரும் பொற்பனை கோட்டையில், சங்க கால மக்களின் வாழ்விடப் பகுதி யாக விளங்கும் பொற்ப னைக்கோட்டையை பார்வையிட்டனர். அக ழாய்வு மேற்கொள்ளும் இயக்குநர் தங்கதுரை, இது வரை தாங்கள் அகழாய்வில் கண்டெடுத்த தங்க மூக்குத்தி, பிராமிய எழுத்தா லான மண்பாண்டத்தின் ஓடுகள் உள்ளிட்ட அரிய பொருட்களை காண்பித்து அவைகள் பயன்பாட்டில் இருந்த காலத்தையும் குறிப்பிட்டார். ரோமானியர்களோடு வாணிபத் தொடர்பு வைத்தி ருந்ததற்கான அடையா ளங்கள் கிடைத்துள்ள தையும் குறிப்பிட்டு விளக்கி னார். மேலும், திருக்கட்ட ளையில் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட கற்கோ யில், சோம சுந்தரேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்து அதன் கலைநயத்தை ரசித்தனர்.