நாகப்பட்டினம், ஜுலை 29-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கிழக்கு மண்டல பயிற்சி முகாம் வேளாங்கண்ணியில் ஜுலை 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
அதில் முதல் நாள் முகாமில் திருச்சி, தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரிய லூர் பகுதியில் உள்ள மாவட்ட பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு மாநில துணைத்தலைவர் நா. முத்துநிலவன், ஆர்.நீலா ஆகியோர் தலைமை வகித்தனர்.
கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி வர வேற்புரை ஆற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஓவியர் ஸ்ரீரசா, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்ன தாக தமுஎகச கலைஞர்களின் குரலிசை யுடன் முகாம் துவங்கியது. முகாமில், ‘அமைப்பு சந்தித்த கலை இலக்கிய அரசியல் சவால்கள்’ என்கிற தலைப்பில் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராம லிங்கம் பேசினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், மாநில பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரை யாற்றினர். நாகை மாவட்டச் செயலாளர் ஆதி. உதயகுமார் நன்றி கூறினார்.