districts

img

மாட்டுவண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி, செப்.4- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் பிரசித்தி  பெற்ற ஸ்ரீபால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 48 ஆவது  நாள் மண்டல அபிஷேகத்தை ஒட்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.  இதில் பெரியமாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று  பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, இராமநாத புரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையா ளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசு  மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. நாகுடி  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.