தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக பல்வேறு திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் புதிய வாரச் சந்தை வணிக வளாகத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவராமசுந்தரி ஆகியோர் பார்வையிட்டனர்.