தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.142.65 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேசன், திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வீரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.