தஞ்சாவூர், அக்.27- அருட்பெருட்ஜோதி, தனிப்பெருங்கருணை வள்ளலார் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா, மாநில அளவில் நடத்தப் பெற்ற மாபெரும் பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, தமிழ்ப் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்து, அருட்பெருஞ்ஜோதி ஞானதீபத்தை ஏற்றி வைத்துப் பேசி னார். பதிவாளர்(பொ) முனைவர் இளையாப் பிள்ளை முன்னிலை வகித்தார். புலமுதன் மையர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வர வேற்றார். தொடர்ந்து தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகளின் இயக்குநர் மருத்து வர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய, “வைகுண்டர் வள்ளலார் ஓர் ஒப்பீட்டு” நூல் வெளியிடப்பட் டது. நூலின் முதல் படியை, தஞ்சாவூர் மாந கராட்சி மேயர் சண்.இராமநாதன் வெளியிட, துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் புதல்வர் ராஜா ராமலிங்கம், வடலூர் சங்க கெளரவத் தலைவர் ராமதாஸ், வடலூர் தலைமைச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மரு. வெற்றிவேல், மரு.பி.கி.சிவராமன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற மாநில அளவி லான மாபெரும் கல்லூரிப் பேச்சுப் போட்டி யில், மாநிலம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு ரூ.30 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.20 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.10 ஆயிரம், ஆறுதல் பரிசாக பத்து பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது.