கரூர், அக்.22 - கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், இனுங்கூர் ஊராட்சிக்குட் பட்ட வைரபுரி கிராமத்தில் அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் குடியிருக்கும் பகுதியில், ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதி கள் எதுவும் செய்து கொடுக்க வில்லை. அடிப்படை வசதிகள், கோரிக் கைகளை வலியுறுத்தி கேட்டால், மிரட்டல் விடுவது, இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலை உள்ளிட்ட பல பணிகளை ஊராட்சி நிர்வாகம் மற்ற பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்து இந்த மக்களை தொடர்ந்து பல ஆண்டுகளாக வஞ்சித்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிப்ப தற்கு குடிநீரின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுத்த வீடுகள் தற்போது குடியிருப்பதற்கு தகுதி இல்லாமல் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுகிறது. பொது கழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும், சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் பராமரிப்பு பணி செய்து கொடுக்க வேண்டும், தெருக்களில் சாக்கடை கால்வாய், தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வைரபுரி கிளை சார்பில் குளித்தலை ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வைரபுரி கிளைச் செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ராஜூ, குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச் செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை குளித்தலை ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் 15 நாட்களுக்குள் குடிநீர் வசதி செய்து தரப்படும். மற்ற கோரிக்கை களும் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.