districts

img

வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா கூட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.21 - வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பில் சனிக்கிழமை திருச்சி திரு வெள்ளறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்டச் செயலாளர் சுப்ரமணியன், சிபிஎம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றி யச் செயலாளர் மனோகரன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆணை முத்து, மாதர் சங்கம் லிங்கராணி ஆகி யோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம், சிஐடியு, மாதர் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய  தலைவர் நல்லையன் நன்றி கூறினார்.  இதேபோன்று துறையூர் வட்டம் பச்சமலை கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட் டக் குழு மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் வாச்சாத்தி வழக்கு வெற்றி குறித்து ஊர் கூட்டம் நடத்தப் பட்டது.  கோம்பை, மணலோடை மலைக் கிராமங்களில் சுமார் 10 கி.மீ. தூரம் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் மற்றும்  இனிப்பு வழங்கப்பட்டது. வாச்சாத்தி வழக்கு வெற்றி குறித்து சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் நடராஜன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சுப்ரமணியன், ஒன்றியச்  செயலாளர் ஆனந்தன், இளங்கோவன் ஆகியோர் பேசினர்.