நிலஅளவர் முதல் கூடுதல் இயக்குநர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அரியலூர் கோட்டத் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். வட்ட துணை ஆய்வாளர் வெற்றிசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.