நில அளவர் முதல் கூடுதல் இயக்குநர் வரை உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் புல உதவியாளர்கள் நியமனம் செய்வதைக் கைவிடவேண்டும். அனைத்து குரு வட்டங்களுக்கும் இரண்டு புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் வியாழனன்று திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி சிறப்புரையாற்றினார்.