திருச்சிராப்பள்ளி, அக்.8 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டுகளாக அடிமனை பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளி திருமுத்தம் கிராமத்தில் புதிய பெயரில் பத்திரங்கள் பதிய கூடாது என ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவல கத்திலும், மேற்கண்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட அனு மதி, திட்ட அனுமதி, வரைபட அனுமதி, கட்டிட நிறைவு சான்று போன்ற எந்த அனுமதிச் சான்றுகளும் கொடுக்கக் கூடாது என திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும், புதிய பெயரில் இந்தப் பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்கக் கூடாது என ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவல கத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தலையிட்டு மேற்கண்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பொது மக்கள் இடங்களை விற்கவோ, வங்கி யில் வைத்து கடன் பெறவோ, உயில் எழுதவோ, பழைய வீடுகளை இடித்து புனரமைப்பு செய்வதற்கோ முடியா மல் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரங்களில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வாக்கு சேகரிக்கும் போது, வேட்பாளர்கள் ஸ்ரீரங்கத்தின் அடிமனை பிரச்சனையை, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தீர்த்து விடுவோம் என்று கூறுகின்றனர். ஆனால் இன்று வரை அடிமனை பிரச்சனை தீர்க்க முடி யாத பிரச்சனையாக உள்ளது. எனவே ஸ்ரீரங்கம் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிமனை பிரச்சனையில் தமிழக அரசும், இந்துசமய அறநிலையத்துறை யும் தலையிட்டு ஸ்ரீரங்கம் அடிமனை பிரச் சனைக்கு உரிய தீர்வு காண வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் அக்.17 அன்று ஸ்ரீரங்கத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற உள்ளது. இதுகுறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கத்தில் சனிக் கிழமை நடந்தது. நிகழ்ச்சிக்கு பகுதிச் செயலாளர் தர்மா தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஸ்ரீரங்கம் கீழ சித்திரவீதி பகுதியில் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கினர்.